search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி"

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு தாவும் போது, பதவி தானாகவே பறிபோகும் வண்ணம் கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வெங்கையா நாயுடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநிலங்களவையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதுதான் எனது முன்னுரிமை பணி. தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாநிலங்களவை விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கான குழு, தனது முதல்கட்ட அறிக்கையை என்னிடம் தந்துள்ளது.

    இறுதி அறிக்கை, அடுத்த மாத இறுதியில் கிடைக்கும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில், அதில் கடுமையான உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும். கட்சியை விட்டு விலகுபவர், தனது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை தானாகவே துறந்துவிடும் வகையில், விதிமுறைகளை சேர்க்க வேண்டும். இது, ஒரு தார்மீக பொறுப்பு. ஆனால், சிலர் இதை செய்வார்கள், சிலர் செய்ய மாட்டார்கள். ஆகவே, இதை அரசியல் சட்ட கடமையாக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார். 
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நலம் விசாரித்துள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.  

    கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    கருணாநிதியை சந்தித்த தகவலை வெங்கையா நாயுடு  தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று வருகை தர உள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வர உள்ளார். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.  
    ×