search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர்"

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த  ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருவள்ளூர் சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிலோ மீட்டர் வரை 11 கிராமங்களை இணைத்து உருவாக்கப்படுகிறது.
    • சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் மேம்பாடு ஆகியவையும் இந்த சாட்டிலைட் நகர பணிகளில் அடங்கும்.

    திருவள்ளூர்:

    தமிழக சட்டசபை கூட்டத்தின்போது தமிழகத்தில் 5 நகரங்கள் சாட்டிலைட் நகரங்களாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூரை சாட்டிலைட் நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிலோ மீட்டர் வரை 11 கிராமங்களை இணைத்து உருவாக்கப்படுகிறது.

    இதில் அரியபாக்கம், ஆத்துப்பாக்கம், வட மதுரை, சித்தரியம்பாக்கம், பலேஸ்வரம், வேலபாக்கம், ரால்லபாடி, எல்லாபுரம், பெரியபாளையம், பனப்பாக்கம், மூங்கில்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. மேலும் 11 தாலுகாக்களும் பரிசீலக்கப்பட்டு வருகின்றன.

    இந்த 11 தாலுகாக்களில் அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், மதுரவாயல், பொன்னேரி, பூந்தமல்லி, திருவொற்றியூர், திருவள்ளூர், திருத்தணி, மற்றும் ஊத்துக்கோட்டை ஆகியவை அடங்கும். திருவள்ளூர் சாட்டிலைட் நகரமானதை யொட்டி அதில் இடம்பெற்றுள்ள கிராமங்களின் அருகில் சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை இணைப்பு, ரெயில் இணைப்பு, வெள்ள பாதிப்பு தடுப்பு உள்ளிட்ட 11 வகையான வசதிகளை வழங்குவது தொடர்பா கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாட்டிலைட் நகரத்தில் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்கள், நடைமுறையில் உள்ள பணிகளை செய்து முடிக்கும் செயல்பாடுகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பற்றியும் இந்த பொருளாதார ஆய்வில் பரிசீலிக்கப்பட்டன.

    மப்பேட்டில் உருவாகும் மல்டி-மாதிரி தளவாட பூங்கா, சென்னை வெளிவட்ட சாலை, ஒருங்கிணைக் கப்பட்ட நடைபாதை, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அகலப்படுத்துதல், சென்னை-பெங்களூஐ தொழில் வழித்தடத்தின் மேம்பாடு ஆகியவையும் இந்த சாட்டிலைட் நகர பணிகளில் அடங்கும்.

    • பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
    • மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர், பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைகுப்பம் ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் தொடர்ந்து தகராறு இருந்து வருகிறது.

    இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடிதொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கூனங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு நிரந்த தீர்வுகாணக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    • இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.
    • திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவரச சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவான, மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்பதை நனவாக்கும் வகையில் ஏற்கெனவே திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.

    தமிழக முதல்வர், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளன.

    அதே போல், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் 14 இடங்கள் உட்பட 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், ஆவடி மாநகராட்சியில் புதிதாக ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஆவடி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் வாங்கித் தரப்பட உள்ளது. அதே போல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.34.50 லட்சம் மதிப்பில் அதிநவீன வாங்கித் தரப்பட உள்ளது.

    அதே போல் பெரியபாளையம், மீஞ்சூர் மற்றும் பீரகுப்பம் ஆகிய பகுதிகளில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×