search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள் இடிப்பு"

    • இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.53 லட்சம் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டுள்ளது என்று ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    23 மாநிலங்கள், 4 யூனியன் பிரேதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் நாடு முழுவதும் இடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும், வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், நீதிமன்ற உத்தரவுகளால் சுமார் 3 லட்சம் பேர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2022ல், நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக 33,360 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2023 இல் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    2022 ஆம் ஆண்டில் 46,371 வீடுகள் இடிக்கப்பட்டு 2.3 லட்சம் பேர் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 107, 499 வீடுகள் இடிக்கப்பட்டு 5.15 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    குர்கான், டெல்லி, அகமதாபாத், அயோத்தி, சூரத் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலான ஏழைகள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான மக்களிடம் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கும், அவர்களின் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கும் போதுமான காரணங்களை அதிகாரிகள் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர்.

    இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் எந்திரத்துடன் காகிதப்பட்டறைக்கு வந்தனர்.

    மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கருணாகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    மேலும் சாலை யோரத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.
    • ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆனால் அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினார். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில், பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கற்குழாய் தெருவிற்கு வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தங்களது வீட்டின் சுவற்றின் மேல் ஏறிநின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.

    இதகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இன்னும் சில நாட்களில் அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்றனர்.

    • வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

    அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார்.
    • முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகர் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 13 குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு அந்த நபர் பேனர் வைத்தார். ஆனால் பொதுமக்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை.

    இதையடுத்து அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார். காலை 6.40 மணி அளவில் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மின் இணைப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், தாசில்தார் உத்திரசாமி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த  ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு தங்கி இருந்த 20 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    வாணியம்பாடி:

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து பாலாறு வரை செல்லும் 3,800 மீட்டர் நீள ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அங்குள்ள குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 50 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு தங்கி இருந்த 20 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்கள் உடனடியாக தங்குவதற்கு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். சில நாட்களில் 20 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.
    • ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்: 

    கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே குளம் பகுதியில் 8 வீடுகள் உள்ளன‌. இந்த வீடுகள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி சார்பில் பொறியாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளை இடிக்க தயாரானார்கள். உடனே அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக இருந்தாலும் கூட இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இடமாகும். மேலும் இந்த இடத்திற்கும் மாநகராட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மேலும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்போது நாங்கள் உரிய பதில் அளிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தற்சமயம் வீடுகள் இடிக்க மாட்டோம். வீட்டிற்கு வெளியில் உள்ள கழிப்பறைகளை இடிக்கவுள்ளோம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த நபர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் வெளியில் இருந்த கழிப்பறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியினை தொடங்கினார்கள்‌‌ இந்த நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    ×