search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்களூர் ஏரி"

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.
    • ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது.

    இது 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது நான்கு மதகுகள், 2 கலங்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரியை சுற்றி சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது.

    இந்நிலையில் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, கட்டிடங்கள், கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரியின் பரப்பளவு மெல்ல, மெல்ல சுருங்கி வருகிறது. மேலும் ஏரிக் கரையோரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்துபவர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.

    இதேபோல் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் மூலம் காக்களூர் ஏரிக்கு திறந்து விடுவதால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடையும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்நிலையில் காக்களூர் ஏரியின் கரைகள் பரிதாபமான நிலையில் உள்ளன. இந்த ஏரியில் அல்லி செடிகள், வேலி காத்தான் முள் செடிகள், பாளை செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் அதில் இருந்த மதகுகள் கலங்கள் இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது. மேலும் கரைகளும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைதீவிரம் அடைந்தால் நீர்வரத்து அதிகமாகி காக்களூர் ஏரியின் கரைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 100 அடியாக உயர்ந்துள்ளது.

    எனவே மாவட்ட தலை நகரில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, அடர்ந்து வளர்ந்துள்ள அல்லி செடி, பாளை செடி, வேலிக்காத்தான் முள்செடி ஆகியவற்றை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த  ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×