search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி பிரம்மோற்சவம்"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம் மோற்சவ விழா நேற்றுமாலை கொடி யேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. முதல் வாகன புறப்பாடாக நேற்றிரவு பெரிய சே‌ஷம் எனும் 7 தலைகளுடன் கூடிய தங்க நாக வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.

    பாற்கடலில் மகாவிஷ்ணுவை எப்போதும் தன் உடலால் தாங்குபவர் ஆதிசே‌ஷன். ஆதிசே‌ஷனின் வடிவமாக கருதப்படுவது 7 தலைகள் கொண்ட பெரிய சே‌ஷ வாகனம். இதனால், ஆதிசே‌ஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் முதல் வாகனமாக பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம், வழக்கமாக இரவு 9 மணிக்கு தொடங்கும் வாகனசேவையை இம்முறை 8 மணிக்கே நடத்தியது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற பெரிய சே‌ஷ வாகனத்தின் முன்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய கலைக் குழுவினர் ஆடல், பாடலுடன் மேளதாள வாத்தியங்களை இசைத்தனர்.

    பிரம்மோற்வ விழாவின் 2-ம் நாளான இன்றுகாலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி உலா வந்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.

    இதைத்தொடர்ந்து, இன்று இரவு தங்க அம்ச வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பவனி வருகிறார். நாளை காலை சிம்ம வாகன த்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 16-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், அன்றிரவு சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 17-ந் தேதி இரவு நடக்கிறது. கருட சேவையை தரிசிக்க சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, நேற்று மாலை 4 மணி முதல் 4-45 மணி வரை மகர லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர்யாதவ், முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குவதற்காக ஆந்திர-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பகல் 1 மணிக்கு கார் மூலம் திருமலைக்கு வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு ஆந்திர மாநில அரசு சார்பில், மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்றார். சந்திரபாபுநாயுடுவுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதான அர்ச்சகர்கள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவுக்கு பரிவட்டம் கட்டினர்.

    பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்களை ஒரு வெள்ளித்தட்டில் வைத்து, திருமலையில் உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை மேள தாளம் முழங்க முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தனது தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக வந்து மூலவர் வெங்கடாஜலபதியின் பாதத்தில் வைத்து, பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டார். பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு தீர்த்த பிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவரான மலையப்பசாமி தங்க, வைர அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 17-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரை கருடசேவை நடக்கிறது. 18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டம், 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், 21-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து 7.30 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. #tirupati #tirupatibrahmotsavam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் மாட வீதிகளில் வாகனங்களில் சாமி ஊர்வலம் நடக்கிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை நாளை காணிக்கையாக வழங்குகிறார். விழாவின் முக்கிய நாளான 17-ந் தேதி கருட சேவையும், 18-ந் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ந் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ந் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21-ந் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா வினைக்காண வசதியாக 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

    கருட சேவை நாளில் ரூ.300 மற்றும் சிறப்பு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. இதேபோல் 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களின் விநியோகமும் நிறுத்தப்படும். கருட சேவையன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

    பக்தர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் மூத்த குடிமக்கள் உள்பட 8 வகையான தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. #tirupati #brahmotsavam
    திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.

    அந்த நாட்களில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள். இதனால் பிரம்மோற்சவ விழா நாட்களில் தேவஸ்தானம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் தரிசனங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள், ராணுவ வீரர்கள், என்.ஆர்.ஐ. வாசிகள் மற்றும் ஆர்ஜித சேவை தரிசனங்கள் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது.

    ஆதலால் இதனை கருத்தில் கெண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் 67,890 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,289 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத் திருந்தனர். அவர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    நேர ஒதுக்கீடு முறை பக்தர்களும் நடைபாதை மார்க்கத்தில் வந்த பக்தர்களும் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. காலை, இரவு இருவேளைகளில் ஆகம விதிப்படி பல்வேறு வாகன வீதிஉலா நடக்கிறது.

    காலை நேரத்தில் வாகன வீதிஉலா வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை நடந்து வந்தது. இரவில் 9 மணியில் இருந்து 11 மணிவரை நடந்து வந்தது. இந்த ஆண்டு காலை நேரத்தில் வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை வாகன வீதிஉலா நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    ஆனால் இந்த ஆண்டு இரவில் நடக்கும் வாகன வீதிஉலா நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை நடக்கிறது. கடந்த ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 12-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அங்குரார்ப்பணம், 13-ந்தேதி மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    14-ந்தேதி காலை சிறிய சே‌ஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

    18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட அனைத்து வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நாட்களில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி வேன், கார், ஜீப் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் கூடுதலாக வசூலித்தால் டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி தனியார் வாகனங்களான வேன், கார், ஜீப் ஆகியவற்றின் உரிமையாளர்கள், டிரைவர்களை வரவழைத்து, திருப்பதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விவேகானந்த ரெட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் வாகனங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் வந்து செல்வார்கள்.

    எனவே பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீதும், அதன் வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு பெரியவர்களுக்கு ரூ.65, சிறியவர்களுக்கு ரூ.40 நிர்ணயித்துள்ளோம். கட்டண விவரம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் தனியார் வாகனங்களில் ஒட்டப்படும். அதில் கூறப்பட்டுள்ள படியே பக்தர்களிடம் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும்.

    மேலும் திருப்பதியில் இருந்து திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம், சீனிவாசமங்காபுரம் ஆகிய கோவில்களுக்குத் தனியார் வாகனங்களில் பக்தர்கள் பலர் சென்று வருவார்கள். மேற்கண்ட கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி, திருமலையில் இருந்தும் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடப்பதால் பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.



    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி அனில்குமார்சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் சிறப்பு ஏற்பாடு பணிகளை முடிக்கவேண்டும். பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. 6,800 கார்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 165 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான துணை அதிகாரிகள் பாலபாஸ்கர், சீனிவாசராஜி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, என்ஜினீயர் சந்திரசேகர் ரெட்டி, கோவில் அதிகாரி அரிந்திரநாத், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மகந்தி பங்கேற்றனர். #TirupatiTemple

    திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதமும், 2-வது பிரம்மோற்சவம் அக்டோபர் மாதமும் நடைபெற உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.
    ×