search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி முருகன் கோவில்"

    • கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
    • பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.

    ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் வசதிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணிக்கு வருகை தந்து மலைப்பாதை திருப்படிகள் வழியாக மேலே நடந்து வந்து ஆய்வு செய்தார். பின்னர் முருகனை வழிபட்டார்.

    • முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
    • 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தினமும் மாலையில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று அஸ்வினியுடன் தொடங்கியது. விழா வருகிற 25-ந்தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனால் திருத்தணி நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. கோவில் முழுவதும் பக்தர்களாக நிரம்பி இருந்தனர்.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    குற்றசெயல்களை தடுக்க முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன 30 சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட 127 கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொது சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் , 5 அவசரக் கால வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    மின்சார வாரியம் மூலம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக 400-க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். தடையில்லா குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகளும், 60 தற்காலிக நவீன கழிவறைகளும், எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்படும். தீயணைப்புதுறை சார்பாக தீயணைப்பு ஊர்த்திகள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்தும் திருத்தணிக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் நாளை முதல் 25-ந் தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை- திருப்பதி சாலை, அரக்கோணம் - திருத்தணி சாலை, சித்தூர்- திருத்தணி சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவையொட்டி கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா செய்து வருகின்றனர்.

    • ஆடி கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு.
    • தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நாட்களில் 24 மணி நேரமும் அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும்.

    அதேபோல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற ராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். புதிதாக அமைக்கப்படுகின்ற வெள்ளி தேர் பணிகளையும் தற்போது ஆய்வு செய்துள்ளோம்.

    கோவிலுக்கு மாற்றுப்பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம். 3 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இந்த விழாவின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவசர உதவிக்கான எண் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆடி கிருத்திகை திருவிழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை (21ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.

    விழா நாளை காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. மறுநாள் (22-ந்தேதி) ஆடி பரணி, 23-ந்தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24-ந்தேதி 2-ம் நாள் தெப்பமும் 25-ந்தேதி 3-ம் நாள் தெப்பமும் நடக்கிறது.

    ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை-திருப்பதி சாலை, அரக்கோணம்-திருத்தணி சாலை, சித்தூர்-திருத்தணி சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.
    • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    அவர்கள் மலைக்கோவிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 284, தங்கம் 1055 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 425 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • இந்த மயில் வாகனத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • திருத்தணியில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முருகப் பெருமான் மாட வீதியில் வலம் வருவதற்காக மயில் வாகனம், பூத வாகனம், யானை வாகனம், புலி வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் தங்கத்தேர், வெள்ளித்தேர் ஆகியவை மலைக்கோவிலில் உள்ளன.

    இந்த வாகனங்களில் பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் சுவாமி ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிலையில் தமிழ்நாடு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மயில்வாகனம் உருவாக்கப்பட்டது, பின்னர் சுமார் 50 கிலோ எடை கொண்ட செப்புத்தகடு மயில்வாகனம் மீது பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு, நேற்று மலையடிவாரத்தில் உள்ள புதிய தோட்டக்காரர் சத்திரத்தில் வைக்கப்பட்டது.

    பின்னர் மயில் வாகனத்தை ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு கொண்டுசென்று பூஜை செய்து காணிக்கையாக கோவில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த மயில் வாகனத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
    • ஆடி மாதம் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    விடுமுறை தினம் மற்றும் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளம் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வருகின்ற 23-ந்தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், வருகின்ற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக சரவணப்பொய்கை குளத்தில் இந்தாண்டிற்கான தெப்பம் கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் பேரல்களுக்கு வண்ணம் தீட்டபட்டு, தெப்பத்தை கட்டி குளத்தில் மிதக்க விட்டு பரிசோதித்தனர். ஓரிரு நாட்களில் தெப்பம் கட்டும் பணி முழுமை பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் விரதம் இருந்து கோவிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து திரளான பெண்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், நேர்த்தி கடனை செலுத்தி சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும், வேண்டுதல் நிறைவேற்ற 20-க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்திலேயே சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா நேற்று நடைபெற்றது.

    • இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    • சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் முன் ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவிலில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 21.7.2022 முதல் 25.7.2022 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த 5 நாட்களில் பெரிய அளவிலான கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் முன் ஏற்பாடாக முதல் கட்ட நடவடிக்கைகள் என்ற வகையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், திருத்தணி கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தோம்.

    கடந்த வாரம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கும், ஆடி கிருத்திகை திருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்கும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அரசு துறை சார்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    இன்றைக்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். பக்தர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறைகள், குளியலறைகள், கண்காணிப்பு கேமிராக்கள், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், அதுமட்டுமின்றி, தீயணைப்பு வசதிகள், தகவல் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காவல்துறை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளும், வாகனங்களை நிறுத்துவதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், எந்த வகையிலான கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஸ்வத் பேகம், துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, வேலூர் மண்டல நகைகள் சரி பார்ப்பு துணை ஆணையர் ரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உடன் இருந்தனர்.

    • மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது.
    • மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது.

    திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர்.

    மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள ஐந்து கடைகள் கடந்த 1-ந் தேதி நடைப்பெற்ற இந்த ஆண்டிற்கான கோவில் பொது ஏலத்திற்கு அறிவிக்கவில்லை. இதுக்குறித்து கோவில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் மலைக்கோவில் பக்தர்களின் நலனுக்காவும், நிர்வாக வசதிக்காவும் மலைமேல் பெருந்திட்ட வளாகம் அமைக்கபட உள்ளது.

    மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது. இது குறித்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் ஆணையரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.

    ×