என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruttani Murugan Temple"

    • மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
    • முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகை. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.

    தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திருத்தணி மலையின் கீழ் பகுதியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 'முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள், மலை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.

    மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

    திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோவிலின் தனிச்சிறப்பு.

    முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழா காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.

    வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரி சனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப்பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவருட்பா நூலில் `சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.

    • திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், மற்றும் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 27 நாட்களில் ரூ.89 லட்சத்து 3 ஆயிரத்து 193 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.
    • திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் திறந்து எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கிருத்திகை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் திறந்து எண்ணப்பட்டது.

    மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 39 நாட்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரத்து 895, 768 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 705 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இந்த தகவலை திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

    பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணும் பணி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
    • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் பணமும், தங்கம் 320 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 480 கிராமும் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.
    • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    அவர்கள் மலைக்கோவிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 284, தங்கம் 1055 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 425 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மூலம் ரூ.1.73 கோடி காணிக்கை வசூலானது.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    ஆடிக்கிருத்திகை திருவிழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துக் கொண்டதால் கடந்த 1 வார காலத்தில் உண்டியல் வசூல் எண்ணும் பணி திருக்கோவில் மண்டபத்தில் கோயில் தக்கார் வே. ஜெய சங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி ஆகியோர் முன்னிலையில் 2 நாட்களாக நடைபெற்றது.

    பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய ரூபாய் நோட்டுகள், சில்லரை என தனித்தனியாக தரம் பிரித்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 1.73 கோடி ரொக்க பணம், 371 கிராம் தங்கம், 15,664 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    ×