search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.38 கோடி உண்டியல் காணிக்கை
    X

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.38 கோடி உண்டியல் காணிக்கை

    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணும் பணி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
    • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் பணமும், தங்கம் 320 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 480 கிராமும் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×