search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூல்
    X

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூல்

    • கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

    பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    Next Story
    ×