search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    • கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
    • பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.

    ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் வசதிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணிக்கு வருகை தந்து மலைப்பாதை திருப்படிகள் வழியாக மேலே நடந்து வந்து ஆய்வு செய்தார். பின்னர் முருகனை வழிபட்டார்.

    Next Story
    ×