search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல்"

    • முதல் மந்திரி மாணிக் ஷா 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • அகர்தலா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட முதல் மந்திரி மாணிக் ஷா டவுன் பர்தோவாலி தொகுதியிலும், மலினா தேப்நாத் ஜுபராஜ்நகர் தொகுதியிலும், ஸ்வப்னா தாஸ் (பால்) சுர்மா தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

    திரிபுராவின் தலைநகராக உள்ள அகர்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் வெற்றி பெற்றார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×