search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தொண்டர்"

    சென்னை எண்ணூரில் கருணாநிதி உடல்நிலை குறித்து மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் துக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
    திருவொற்றியூர்:

    எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் எஸ்.ராஜு (வயது 63). ஓய்வுபெற்ற அனல்மின்நிலைய ஊழியர் ஆவார். தி.மு.க.வில் தீவிர தொண்டரான இவர் முன்னாள் வட்டச் செயலாளர் ஆவார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மனவருத்தமடைந்தார். கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.

    இன்று காலை அவரது மனைவி முனியம்மாள் மகள் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ராஜு தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் துக்கத்தில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    ×