என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி உடல்நிலை பாதிப்பு - தி.மு.க. தொண்டர் தற்கொலை
Byமாலை மலர்29 July 2018 8:55 AM GMT (Updated: 29 July 2018 8:55 AM GMT)
சென்னை எண்ணூரில் கருணாநிதி உடல்நிலை குறித்து மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் துக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருவொற்றியூர்:
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் எஸ்.ராஜு (வயது 63). ஓய்வுபெற்ற அனல்மின்நிலைய ஊழியர் ஆவார். தி.மு.க.வில் தீவிர தொண்டரான இவர் முன்னாள் வட்டச் செயலாளர் ஆவார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மனவருத்தமடைந்தார். கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.
இன்று காலை அவரது மனைவி முனியம்மாள் மகள் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ராஜு தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் துக்கத்தில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் எஸ்.ராஜு (வயது 63). ஓய்வுபெற்ற அனல்மின்நிலைய ஊழியர் ஆவார். தி.மு.க.வில் தீவிர தொண்டரான இவர் முன்னாள் வட்டச் செயலாளர் ஆவார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மனவருத்தமடைந்தார். கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.
இன்று காலை அவரது மனைவி முனியம்மாள் மகள் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ராஜு தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் துக்கத்தில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X