search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் பள்ளம்"

    • நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
    • கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

    இதனால் நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனங்களோ, பொது மக்களோ யாரும் அதில் சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • குழி சாலையில் உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர்.
    • கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

     தருமபுரி,  

    தருமபுரி நகரின் மையப் பகுதியான பேருந்து நிலையம் முன்பு உள்ள முகமதுஅலி கிளப் ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கால்வாயின் மேற்புற வளைய தொட்டி பழுதாகி சாக்கடை தண்ணீர் சாலையில் வழிந்தோடியது.

    இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் வழிந்தோடும் சாக்கடை நீர் கால்வாயில் செல்லும் அளவுக்கு பணியை செய்து வளைய தொட்டியை மூடாமல் குழியை சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்தி சென்று விட்டனர். இந்த குழி சாலையில் உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர்.

    இந்த குழியை ஒட்டியே வணிக நிறுவனங்கள் உள்ளதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இந்த குழி மூடப்படாமல் சாக்கடைநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள வியHபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள சிறிய குழியைக் கூட மூடாமல் திறந்த நிலையில் இருப்பது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. தருமபுரி நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே திறந்த நிலையில் உள்ள குழியை மூட மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது
    • பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர்.

    அன்னூர்,

    கோவை அன்னூர் அடுத்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தார்சாலையானது குரும்பபாளையத்தில் இருந்து வாகார பாளையத்திற்கு செல்லும் வழியாகும். இந்த சாலையில் தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர். இந்தக் குழியின் இருபுறங்களிலும் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த தார் சாலையின் பள்ளத்திலிருந்து வெளியே வரும் நீரினால் அந்த பகுதி சாக்கடை போல காட்சியளிக்கிறது.மேலும் இதன் வழியாக நடைபாதையில் நடக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து வடுகபாளையம் கிராம மக்கள் நாராயணபுரம் ஊராட்சி தலைவரிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, சாலையை சீரமைத்து தருவதாக எந்த ஒரு வாக்குறுதியும் தரவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

    ×