என் மலர்
நீங்கள் தேடியது "Sudden pothole"
- விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
- மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில்,
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மறுப்பு.
- பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தரமணி- திருவான்மியூர் சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது. அதனால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது
- பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர்.
அன்னூர்,
கோவை அன்னூர் அடுத்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தார்சாலையானது குரும்பபாளையத்தில் இருந்து வாகார பாளையத்திற்கு செல்லும் வழியாகும். இந்த சாலையில் தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர். இந்தக் குழியின் இருபுறங்களிலும் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த தார் சாலையின் பள்ளத்திலிருந்து வெளியே வரும் நீரினால் அந்த பகுதி சாக்கடை போல காட்சியளிக்கிறது.மேலும் இதன் வழியாக நடைபாதையில் நடக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து வடுகபாளையம் கிராம மக்கள் நாராயணபுரம் ஊராட்சி தலைவரிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, சாலையை சீரமைத்து தருவதாக எந்த ஒரு வாக்குறுதியும் தரவில்லை என மக்கள் தெரிவித்தனர்.






