என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து"

    • மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மறுப்பு.
    • பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை, திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தரமணி- திருவான்மியூர் சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது. அதனால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
    • மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர்

    டி.என்.பாளையம்,

    பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (39) என்பவர் தனது மனைவி சத்யா மற்றும் மகன், மகளுடன் சொந்த வேலை காரணமாக காரில் கோபி சென்று விட்டு பின்னர் கோபியில் இருந்து பங்களாப்புதூர் சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். காரை ராஜா ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது தனியார் மண்டபம் அருகே ஒரு வலைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜாவுக்கு மட்டும் ரத்த காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    உடன் சென்ற மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர். பள்ளத்தில் விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதமானது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×