search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளம்"

    • மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூரில் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது.

    இதில் 45 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட னர். முதல் பரிசை ராஜபாளையம் ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9,011, வெற்றி கோப்பை யும் தட்டி சென்றது.

    2-ம் பரிசை தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று ரூ.6,011 வெற்றி கோப்பையை யும் வென்றது. முதல் மற்றும் 2-ம் பரிசுகள் எம்.பி. தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக வழங்கப்பட்டது. பரிசுகளை ரவிராஜா, பேராசிரியர் கந்தசாமி வழங்கி பாராட்டி பேசினர்.

    3-ம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், 4-ம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், 5-ம் பரிசை ராஜபாளையம் எங்ஸ்டார் அணியும் பெற்ற னர்.

    ராஜபாளையம் வட் டார அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.
    • அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதற்கென சென்னையில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓடுதள உராய்வு சோதனை கார் சேலம் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விஜயவாடா, ைஹதராபாத், திருப்பதி, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் விமான நிலையங்களில் இருந்து 17 ஊழியர்கள் பங்கேற்றனர்.

    நேற்று முன்தினம் விமான நிலையத்தில் ஓமலூர் தாசில்தார் வள்ளி முனியப்பன் தலைமையில் விமான நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், பறவைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குப்பை, இறைச்சி கழிவை விமான நிலையத்தை சுற்றி கொட்டப்படாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    ×