search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
    X

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

    • மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூரில் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது.

    இதில் 45 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட னர். முதல் பரிசை ராஜபாளையம் ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9,011, வெற்றி கோப்பை யும் தட்டி சென்றது.

    2-ம் பரிசை தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று ரூ.6,011 வெற்றி கோப்பையை யும் வென்றது. முதல் மற்றும் 2-ம் பரிசுகள் எம்.பி. தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக வழங்கப்பட்டது. பரிசுகளை ரவிராஜா, பேராசிரியர் கந்தசாமி வழங்கி பாராட்டி பேசினர்.

    3-ம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், 4-ம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், 5-ம் பரிசை ராஜபாளையம் எங்ஸ்டார் அணியும் பெற்ற னர்.

    ராஜபாளையம் வட் டார அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×