search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமையிடம்"

    • காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
    • வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் வெள்ளக்கோவில் உள் வட்டம் அமைந்துள்ளது. இதில், 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 3.40 லட்சம் பேரும், நகராட்சியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனா். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் வங்கிகள், 89க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள், 3 கல்லூரிகள் அமைந்துள்ளன.

    மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 450க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50-க்கும் மேற்பட்ட சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் கிடைத்து வருகிறது.

    காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என 1988-ம் ஆண்டிலேயே அன்றைய பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு வட்டங்கள் வெள்ளக்கோவிலை விட குறைந்த மக்கள்தொகையும், பரப்பளவும் கொண்டவையாக உள்ளன. ஆனால் வெள்ளக்கோவிலை தனி வட்டமாக அறிவிக்க போதிய மக்கள்தொகை, பரப்பளவு, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல 1967-ல் உருவாக்கப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியும் நீக்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதுடன், தனி வட்டம் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    எனவே வெள்ளக்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம், மீண்டும் வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   

    • ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.
    • ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    ரிஷிவந்தியம் சட்டமன்றதொகுதி திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று தாலுக்காவில் அடங்கி உள்ளது. எனது ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த கோரிக்கையை 50 ஆண்டு காலத்திற்கு பின் கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டமாக அறிவித்தார். இதேபோல் ரிஷிவந்தியம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயனடையும் வகையில் வரும் 2023-24 நிதி ஆண்டில் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டத்தை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக அரசின் கவனவத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில், நீண்டநாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் தொகுதியில் வாணாபுரம் தலைமை யிடமாககொண்டு தனி தாலுகா சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். மேலும் வருகின்ற 9-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரிடம் ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே வருகின்றசட்டமன்ற கூட்டதொடரில் ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    ×