search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார்.

    ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி

    • ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.
    • ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    ரிஷிவந்தியம் சட்டமன்றதொகுதி திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று தாலுக்காவில் அடங்கி உள்ளது. எனது ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த கோரிக்கையை 50 ஆண்டு காலத்திற்கு பின் கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டமாக அறிவித்தார். இதேபோல் ரிஷிவந்தியம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயனடையும் வகையில் வரும் 2023-24 நிதி ஆண்டில் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டத்தை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக அரசின் கவனவத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில், நீண்டநாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் தொகுதியில் வாணாபுரம் தலைமை யிடமாககொண்டு தனி தாலுகா சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். மேலும் வருகின்ற 9-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரிடம் ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே வருகின்றசட்டமன்ற கூட்டதொடரில் ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    Next Story
    ×