என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Headquarters"

    • அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
    • மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.

    சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    இதில், மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

    மதிமுக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    முதல் கட்டமாக 116 யூ.டி.சி. ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக எல்.டி.சி, உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் உதவியாளர் பணியிடத்தை நேரடியாக தேர்வு செய்தால் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அமைச்சக ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வந்தனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச்செயலகத்தில் கடந்த திரண்டு, அங்கு நிர்வாகத்துறை செயலர் கேசவன் அறை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில்  தலைமை செயலகம் முன்பு மீண்டும் அமைச்சக ஊழியர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோரும் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டனர். உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க திங்கள்கிழமை ஆணை வெளியாவதை நிறுத்தவேண்டும். நேடியாக உதவியாளர்களை தேர்வு செய்தால் 600 அமைச்சக ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என வலியுறுத்தினர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமைசெயலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் வரவில்லை. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

    • காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
    • வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் வெள்ளக்கோவில் உள் வட்டம் அமைந்துள்ளது. இதில், 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 3.40 லட்சம் பேரும், நகராட்சியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனா். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் வங்கிகள், 89க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள், 3 கல்லூரிகள் அமைந்துள்ளன.

    மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 450க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50-க்கும் மேற்பட்ட சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் கிடைத்து வருகிறது.

    காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என 1988-ம் ஆண்டிலேயே அன்றைய பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு வட்டங்கள் வெள்ளக்கோவிலை விட குறைந்த மக்கள்தொகையும், பரப்பளவும் கொண்டவையாக உள்ளன. ஆனால் வெள்ளக்கோவிலை தனி வட்டமாக அறிவிக்க போதிய மக்கள்தொகை, பரப்பளவு, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல 1967-ல் உருவாக்கப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியும் நீக்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதுடன், தனி வட்டம் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    எனவே வெள்ளக்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம், மீண்டும் வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   

    • இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது.
    • அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்துகின்றனர்.

    நேதன்யாகு வீடு  

    பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தற்போது லெபனான் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதும் தாக்குதலை தொடர்கிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தியது.

    சூளுரை 

    இதில் உயர் தப்பிய நேதன்யாகு ஹிஸ்புல்லாவை அழித்திழிக்க சூளுரை செய்துள்ளார். அதன்படி லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு பணபலம் கொடுக்கும் அல் குவார்த் அல் - ஹசன் என்ற பொருளாதார பிரிவு உள்ளிட்ட முக்கிய இலக்குகளை தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே அந்த இலக்குகளுக்கு அருகில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

    அல் குவார்த் அல் - ஹசன்

    அல் குவார்த் அல் - ஹசன் மூலமே ஹிஸ்புல்லாவுக்கு ஈரானிடம் இருந்தும், மக்கள் நன்கொடையாகவும் வரும் பணம் பரிவர்த்தனை செய்யபடுகிறது. இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்த அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்தி வருவதால் இதன் மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

     

    தலைமையகம் 

    இதற்கிடையே லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.

     

     100 ராக்கெட்

    மேலும் நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) அமேசான் இந்தியா தலைமையகம் உள்ளது.
    • சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவின் சிலிகான் VALLEY என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமானம் நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இதன்மூலம் வாடகை செலவை வெகுவாக குறைக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

     

    தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

    இந்த டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதமான ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும். இந்த இடமாற்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×