search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு பேருந்துகள்"

    புதுச்சேரியில் இன்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #BJPBandh #PuducherryBandh
    புதுச்சேரி:

    சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாஜக சார்பில் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    முன்னெச்சரிக்கை காரணமாக புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போராட்டத்தினால் வன்முறை உருவாகாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    இந்நிலையில் தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த முழுஅடைப்பு தேவையற்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சனைக்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றும், யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BJPBandh #PuducherryBandh
    ×