search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு"

    • 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2022-23-ம் ஆண்டின் முதல் போக நஞ்சை பாசனத்திற்கு, 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.8.2022 முதல் 9.12.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீ ர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    இந்நிலையில் 30.10.2022 காலை 11 மணியளவில் கீழ்பவானித்திட்ட பிரதான கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும் வண்ணம் உடனே பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்பட்டிருந்த 2300 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் மைல் 6.4-055 குறைவதற்கு முன்பே இந்த பள்ளத்தின் அளவு 6 அடி பள்ளமாக பெரிதாகியது, அதனால் அப்பகுதிகளின் கரைகளில் எவ்வித உடைப்பும் ஏற்படவில்லை . இதனால், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் உடைமைகளுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை .

    தற்பொழுது தண்ணீர் பிரதான கால்வாயின் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் இந்த பழுதை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சேதமடைந்த தலை மதகு சுவர் மற்றும் பேரல்ஆகியவை உடனடியாக சீரமைக்கப்பட்டு3 நாட்களில் பவானிசாகர் அணையிலிருந்து பிரதான தண்ணீர் மீண்டும் திறக்கப்படும். மேலும், தற்பொழுது அனைத்து பாசனப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படுவதால், விசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கீழ்பவானி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.தென் மேற்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், கடந்த ஜூலை 15-ந்தேதி அணை நிரம்பியது.

    தொடர்ந்து அணை நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் கடந்த இரு மாதமாக உபரி நீர் திறக்கப்பட்டு வந்ததால் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 8 ராஜ வாய்க்கால்களான கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு வாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது. இதில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை.அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

    அமராவதி அணையின் வாயிலாக பயன்பெறும், மீதமுள்ள பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் வகையில், தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன் அடிப்படையில் சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் திறக்க அரசுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 5 ஆயிரத்து 443 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2 ஆயிரத்து 661 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் 7.2.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    ×