search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Re-opening of water"

    • 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2022-23-ம் ஆண்டின் முதல் போக நஞ்சை பாசனத்திற்கு, 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.8.2022 முதல் 9.12.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீ ர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    இந்நிலையில் 30.10.2022 காலை 11 மணியளவில் கீழ்பவானித்திட்ட பிரதான கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும் வண்ணம் உடனே பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்பட்டிருந்த 2300 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் மைல் 6.4-055 குறைவதற்கு முன்பே இந்த பள்ளத்தின் அளவு 6 அடி பள்ளமாக பெரிதாகியது, அதனால் அப்பகுதிகளின் கரைகளில் எவ்வித உடைப்பும் ஏற்படவில்லை . இதனால், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் உடைமைகளுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை .

    தற்பொழுது தண்ணீர் பிரதான கால்வாயின் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் இந்த பழுதை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சேதமடைந்த தலை மதகு சுவர் மற்றும் பேரல்ஆகியவை உடனடியாக சீரமைக்கப்பட்டு3 நாட்களில் பவானிசாகர் அணையிலிருந்து பிரதான தண்ணீர் மீண்டும் திறக்கப்படும். மேலும், தற்பொழுது அனைத்து பாசனப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படுவதால், விசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கீழ்பவானி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • வாலிபரின் உடலை தேடுவதற்காக நேற்று அணையிலிருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்த ப்பட்டது.
    • உடல் கண்டெடுக்கப்பட்ட நிலை யில் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த வருடம் 136 அடிக்கு மேல் சென்றது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட ங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிய தொடங்கியது.

    இருந்தபோதும் அணை யிலிருந்து முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முல்லைபெரியாற்றில் அடித்து கொலை செய்ய ப்பட்டு வீசப்பட்ட வாலிபரின் உடலை தேடுவதற்காக நேற்று அணையிலிருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்த ப்பட்டது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலை யில் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

    அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக உள்ளது. வரத்து 484 கனஅடி, திறப்பு 1400 கனஅடி, இருப்பு 4504 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.01 அடியாக உள்ளது. வரத்து 554 கனஅடி, திறப்பு 1349 கனஅடி, இருப்பு 5322 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது.

    ×