search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்டுப்பாடு"

    • குடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுாரில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    காகாபாளையம்:

    மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுார், பெரியபொன்னு காட்டுவளவு பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2012- ல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை அதில் நீறேற்றம் செய்வதில்லை. அதனால் அந்த பகுதியில் சுமார் 20- க்கும் மேற்பட்ட தனிபைப்லைன் அமைத்து மக்கள் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது. .அதனால் மக்கள் தங்கள் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் குடிநீருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தறிதொழிலாளி வெங்கடேசன் (வயது 36) என்பவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவி யேற்ற பிறகு பைப் லைன் துண்டிக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 2 தூண் எங்கள் நிலத்திலும்,மற்ற 2 தூண் மற்றொருவர் நிலத்திலும் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை இது குறித்து கடந்த 28-ந்தேதி மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தோம். கடந்த 12-ல் சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தோம் கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க முடியாமல் திரும்பிவிட்டனர். பிரச்சினை தீர்த்து குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகாவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிவருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள அனந்தமங்கலம், காத்தான்சாவடி, காளியப்பநல்லூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது.

    அனந்தமங்கலம், காத்தான்சாவடி, பகுதிகளில் சாலையின் நடுவே செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    இதனால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடப்பு ஏற்பட்டுள்ள குழாய்களை சீரமைத்து கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×