search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள பயிற்சி"

    • நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் தடகள பயிற்சி மையம்
    • பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட விளை யாட்டு அலுவலர் ராஜேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், விளையாடு இந் தியா (கேலோ இந்தியா) திட்ட நிதி உதவி மூலம், தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா-மாவட்ட மையம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் சுமார் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற் சியாளராக தேசிய அள வில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள் ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாக வும், தற்போது குமரி மாவட் டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட் டிகளில் பதக்கம் வென் றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனி யர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்கவேண்டும். இது நிரந் தர பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.

    இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலு கையோ, நிரந்தர பணியோ கோர இயலாது. தகுதி உடையோர் தங்களது விண்ணப்பத்தை நாகர் கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத் தில் 31.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு, நாகர்கோ விலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டு திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங் கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உருவாக உள்ள தடகள பயிற்சி மையத்தில், சேர ஆர்வமுள்ளவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு த்துறை அழைப்பு விடுத்து ள்ளது.

    இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் அறிக்கை:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடகள பயிற்சி மையம் அமைய உள்ளது. தடகள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு, அதற்கான பயிற்சி முகாம், மார்ச், 10ம் தேதி, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் மார்ச், 10ம் தேதி காலை, 10 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் தடகள போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

    இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்"

    • தடகள சங்கத்தின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
    • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவரும், திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஜூன் மாதம் 2-வது திருப்பூர் மாவட்ட சீனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளையும், ஆகஸ்டு மாதம் 5-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளையும் போட்டோ பினிசிங் எலக்ட்ரானிக் மெசர்மெண்ட் முறையில் நடத்துவது, அதிகப்படியான மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்வது, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடகள போட்டிகள் நடத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலமாக கிடைக்கும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் அனைத்து பள்ளி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர், தடகள பயிற்சியாளர்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யும்முறை, உணவு வகைகள், பயிற்சி முறைகள், காயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றி பயிற்சி முகாம் நடத்துவது, அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி முகாம் நடத்துவது, திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய தடகள வீரர்களை கண்டறிந்து உதவிகள் அளிப்பது, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயண வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

    ×