search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேலர் ஸ்விஃப்ட்"

    • ஏஐ மூலம் மிகவும் எளிதாக இத்தகைய வீடியோக்களை தயாரிக்க முடிகிறது
    • முறையான சட்டங்கள் இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்

    பிரபலங்களை மையமாக வைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் மூலம் தவறான செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

    டீப் ஃபேக் (deep fake) எனப்படும் இத்தகைய வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் ஃபேஸ் ஸ்வேப்பிங் (face swapping) எனப்படும் முகமாற்று முறையில் தயாரிக்கப்படுபவை.

    ஆனால், சமீப சில மாதங்களாக ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அத்தகைய வீடியோக்களை உருவாக்குதல் மிக எளிதாகி வருகிறது. இணையத்தில் பல வலைதளங்கள் இத்தகைய வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் தந்து உதவுகின்றன.

    ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையத்திலோ பொதுவெளியிலோ உள்ள எவரது முகத்தையும் வேறு ஒருவரது முகத்தில் பொருத்தி தத்ரூபமாக ஒரு பொய்யான வீடியோவை தயாரிக்க முடியும். இவற்றை பொய்யானவை என கண்டறிவது சுலபமும் அல்ல. மேலும், இவற்றை நீக்கும் முயற்சியும் நீண்ட நேரம் ஆவதால், இவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    பெண்களை, அதிலும் குறிப்பாக பிரபலமான பெண்களை குறி வைத்து இவை உருவாக்கப்படுவது அரசாங்கங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் முன்னணி பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) குறித்த அத்தகைய வீடியோ வைரலானது.

    இந்த பொய் வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "பொய்யான வீடியோக்கள் மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசு உடனடியாக செய்யும். பயனர்கள் இத்தகைய வீடியோக்களை பொய்யானவை என எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றில் குறியீடுகளை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த ஏஐ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.

    ஏஐ தொழில்நுட்பத்தால் பெருகி வரும் இத்தகைய உள்ளடக்கங்களை கையாள்வது சமூக வலைதளங்களுக்கும் சிக்கலாக இருக்கிறது. இவற்றை உடனடியாக நீக்குவது இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உள்ளது.

    • வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
    • "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).

    தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

    டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.

    எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

    ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.

    கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

    டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.

    இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ×