search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Time magazine"

    • வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
    • "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).

    தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

    டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.

    எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

    ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.

    கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

    டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.

    இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுவதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
    • அகமதாபாத் நகரம் கலாச்சார சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா என டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன.

    கண்கவர் கடற்கரைகள், கோயில்கள், அரண்மனைகள் என கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள படகு வீடுகள் சிறந்த சுற்றுலா அனுபவத்தினை தருகிறது. சுற்றுலா பயணிகள் கேரளாவின் கடற்கரை அழகை கண்டு அனுபவிக்க தொடங்கி உள்ளனர். என டைம் இதழ் தெரிவித்துள்ளது.

    இதேபோல், அகமதாபாத் நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா எனவும் டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் 2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக, குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என பதிவிட்டுள்ளார்.

    எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றாததால் இந்தியாவின் பிரிவினை தலைவர் என்று‘டைம்’ இதழ் கட்டுரையில் தகவல் வெளியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து உலகப் புகழ் பெற்ற “டைம்” வார இதழ் வெளி வருகிறது. இந்த வார இதழுக்கு ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், தெற்கு பசிபிக் நாடுகள் என உலகின் பல பகுதிகளிலும் பதிப்புகள் உள்ளன.

    ‘டைம்‘ வார இதழின் அட்டையில் படமும், அது தொடர்பான கட்டுரையும் இடம் பெறுவதை பிரபலங்கள் கவுரவமாக கருதுகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி வெளியான டைம் வார இதழில் அட்டைப் படத்தில் மோடி இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் வரும் 20-ந்தேதியிடப்பட்ட டைம் இதழின் சர்வதேச பதிப்பில் பிரதமர் மோடி படம் இடம் பிடித்துள்ளது.

    மோடி படம் அருகே “இந்தியப் பிரிவினையின் தலைவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இதழில் மோடி பற்றி இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

    மோடியை கடுமையாக விமர்சித்து, குறை கூறி பாகிஸ்தான் அரசியல்வாதியான சல்மான் தசீர் என்பவரின் மகன் ஆதிஷ் தசீர் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். மோடியை புகழ்ந்து இயன் பிரெம்மர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

    ஆதிஷ் தசீர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்தியாவில் மோடி பிரதமர் ஆன பிறகு மத ரீதியிலான தேசியவாதம் வளரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் தங்களிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

    அனைவருக்குமான வளர்ச்சி என்ற நிலை மாறி உள்ளது. இதனால் பிரிவினையின் தலைவராக மோடி முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு தேர்தலின் போது வேலைவாய்ப்பு பிரச்சினையை முன் நிறுத்தி பிரசாரம் செய்து மோடி வெற்றி பெற்றார். ஆனால் அவரால் அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை.

    மோடி பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவும் நிறைய வாக்குறுதிகள் அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. இதை பயன்படுத்தி ராகுலால் வெற்றி பெற இயலவில்லை. தனித்து நின்று அவரால் மோடியை எதிர்க்க இயலவில்லை.


    இதனால் ராகுலுக்கு துணையாக அவரது சகோதரி பிரியங்கா வந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் வேறு யோசனைகள் இல்லை. வாரிசு அரசியலை ஊக்குவிப்பதைத் தவிர காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை.

    மோடியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இந்தியாவில் எதிரணி பலவீனமாக உள்ளது. இதுதான் மோடிக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக இருக்கிறது.

    மோடி கடந்த 5 ஆண்டுகளில் எந்த புதிய முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. அவர் ஆட்சி மீண்டும் வருமா?

    இவ்வாறு அந்த கட்டுரையில் ஆதிஷ் தசீர் எழுதியுள்ளார்.

    இயன் பிரெம்மர் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தனது 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்களை செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்துள்ளது.

    இந்தியாவில் மேலும் பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்கள் தேவைப்படுகிறது. அந்த பொருளாதார சீர்திருத்தங்களை மோடியால் மட்டுமே செய்ய முடியும்.

    மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். ஆனால் அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் நிறைய வெற்றிகளை இந்தியாவுக்கு தேடி கொடுத்துள்ளது. இந்திய பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்ல வழி வகுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்பட பல நாடுகளுடன் இந்தியாவின் உறவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி வசூல் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் ஆதார் அட்டை எண், பல்வேறு சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேலும் சில சீர்திருத்தங்களும் தேவைப்படுகிறது.

    மோடியால் மட்டுமே அந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியும். ஏனெனில் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. குறிப்பாக மோடி மீது ஊழல் புகார்கள் எதுவும் இல்லை.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் திட்டங்கள் ஏழை- எளிய மக்களை சென்றடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தும் அளவுக்கு மாறியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இந்த திட்டம் சாமானிய மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் மோடியை பாதிக்கும் வகையில் இல்லை.

    இவ்வாறு அந்த கட்டுரையில் இயன் பிரெம்மர் எழுதி உள்ளார்.

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பேனியாப் வாங்கியுள்ளார். #TimeMagazine #Salesforce
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.1375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

    டைம் பத்திரிக்கையை வாங்கியதற்கும் சேல்ஸ்போர் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை என்றும், பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரிகையை வாங்கினாலும், டைம் பத்திரிக்கையின் அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும், அதை தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை டைம் பத்திக்கை தனது அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trump #MelaniaTrump #Timemagazine
    நியூயார்க்:

    அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்படும் டிரம்பின் சட்டத்தினை எதிர்க்கும் வகையில் டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் டிரம்ப் , ஒரு குழந்தையுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. வெல்கம் டூ அமெரிக்கா என்ற வாக்கியத்துடன் உள்ள டிரம்ப் புகைப்படம் அந்த புகைப்படத்தில்  உள்ள குழந்தை தனது தாயை தேடி அழுகிறது. அது டிரம்ப் அரசின் குடியேற்ற விதிகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



    டிரம்பின் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளை காண செல்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ ரியலி டோண்ட் கேர். டூ யு? என்ற இந்த வாக்கியம் அடங்கிய சர்ட் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. #Trump #MelaniaTrump #Timemagazine

    ×