search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் தாக்குதல்"

    • பிஸ்கோவ் விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் சேதம்
    • ஏராளமான டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து வருகிறது.

    இதனால் ரஷியாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டிடங்கள் போன்றவை கட்டமைப்புகள் சேதம் அடைந்து வருகின்றன.

    இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை (இன்று) ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷியா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.

    ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் கவர்னர் மற்றும் மீடியாக்கள் தெரிவித்தன. இதற்கிடையே ஓர்யோல், பிரயான்ஸ்க், ரியாஜான், கலுகா மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிஸ்கோ பிராந்தியம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு Il-78 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிஸ்கோவ் கவர்னர் மிஹைல் விடேர்னிகோவ், இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
    • உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    கிவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

    சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் பாலம் மற்றும் ஆயுத கிடங்கு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்தப்பட்டன.

    அதே போல் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.

    இதற்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரீமியா மற்றும் மாஸ்கோ நகரம் மீது நடந்த உக்ரைனின் டிரோன் தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும். உக்ரைனின் செயல்கள் பதற்றங்களை அதிகரிக்க செய்யும். இந்த சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன. இதனால் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை எங்களது தரப்புக்கு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது.

    இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷியாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    கிரீமியா மற்றும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.

    • ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
    • மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் அளித்து வருவதால் இப்போரில் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதில் ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது.

    மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது. அங்கு பெரும் கரும்புகை வெளியேறியது. பயங்கர வெடிசத்தங்களை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு அலறியபடி வெளியே வந்தனர்.

    இந்த தாக்குதல் காரணமாக கிடங்கை சுற்றி 5 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் வெளியாகின.

    ரெயில் நிலையம் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் இருந்து விண்ணை மூட்டும் தீ பிழம்பு எழுப்பும் காட்சி பதிவாகி இருந்தது. மற்றொரு வீடியோவில் விமான நிலையம் அருகே புகை மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும் காட்சி இருந்தது.

    இதுகுறித்து கிரிமியா கவர்னர் செர்ஜி அக்சியோ னோவ் கூறும்போது, வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் கிரிமியா பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும் போது, கிரிமியாவின் ஒக்ய பிரஸ்கி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரஷிய ராணுவ கிடங்குகள் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்தது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் கிரிமியா பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமீயா பாலத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலம் மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்ரவரியில் முழுமையாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
    • உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    மாஸ்கோ:

    ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து விட்டன.

    இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் அரசு கிரீமிய தீபகற்ப பகுதிகள் அருகே 7 ஆளில்லா டிரோன்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

    இந்த தாக்குதல் முயற்சியில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை. 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. மற்ற டிரோன்கள் போர் படைகளை கொண்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.

    ஆனால் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    கிரீமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வர இணைப்பு மேம்பாலம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் அதையும் உக்ரைன் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • கீவ் பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது
    • எதிர்தாக்குதலில் ரஷிய டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது

    ரஷிய- உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    நேற்றிரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா டிரோன் மூலம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

    கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ, "குண்டுவீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்" என தெரிவித்தார்.

    உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் டிரோன் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். டார்னிட்ஸ்கி மாவட்டத்திலும் இது போன்று கீழே வீழ்ந்த ரஷிய டிரோன்களால் ஒரு வீடு சேதமடைந்தது. செவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் பால்கனி தீக்கிரையானது.

    இந்த தாக்குதலை ஈரான் நாட்டு ஷாஹெட் டிரோன்கள் மூலம் நடைபெற்ற ஒரு "பெரும் தாக்குதல்" என விமர்சித்துள்ள கீவ் நகர ராணுவ தலைமை அதிகாரி செர்ஹி பாப்கோ, "விமானப்படையின் எதிர்தாக்குல் படை, சுமார் ரஷியாவின் 10 தாக்குதல் இலக்கை அழித்தது" என டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இவையல்லாமல் உக்ரைனின் வேறு சில பகுதிகளான தென்கிழக்கில் உள்ள சபோரிழியாவிலும், தெற்கில் உள்ள மைகோலெய்வ் பகுதியிலும் மற்றும் மேற்கில் உள்ள மெல்னிட்ஸ்கி பகுதியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது.

    நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உச்சி மாநாட்டிற்காக லிதுவேனியா நாட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோதல் நேரங்களில் அமெரிக்கா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.
    • குறைந்த செலவே என்பதால் பயங்கரவாதிகளும் அதிகமாக பயன்படுத்துகின்றன.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆரம்ப கட்டத்தில் ஏவுகணை, போர் விமானம், டாங்கிகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைத்தது ரஷியா.

    அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய, உக்ரைனும் ரஷியா மீது திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நேருக்கு நேர் மோதல், விமான தாக்குதல் குறைந்து டிரோன்களை பயன்படுத்தி வருகின்றன.

    செலவும் குறைவு, வீரர்கள் மரணமும் கிடையாது. சேதப்படுத்தும் இடம் அதிகம். இதனால் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த 30-ந்தேதி (நேற்று முன்தினம்) உக்ரைன் திடீரென ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. சுமார் 8 டிரோன்கள் இதற்காக பயன்படுத்தியதாக ரஷியா குற்றம்சுமத்தியுள்ளது.

    இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்களும் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின.

    இரண்டு நாடுகளும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரேன்களை அனுப்பி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க செய்கின்றனர். இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

    வான்வெளி தாக்குதலுக்கு டிரோன்களை பயன்படுத்துவது உலக நாடுகளில் அதிகரித்துள்ளதால் இது பேராபத்தாக முடியுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டிரோன் கண்டுபிடிக்கப்பட்டபோது உளவு பார்ப்பதற்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தின. எதிரி நாடுகள் எல்லைக்குள் சென்று உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    தற்போது எந்த இடத்தில் இருந்து டிரோன் தங்கள் எல்லைக்குள் ஊடுருவுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாடுகளுக்கும் தலைதூக்கியுள்ளது.

    உலக வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் சர்வதேச சட்டம் கொண்டு வந்து இதை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, டிரோன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

    டிரோன் பயன்பாடு, வாங்குவது, பயன்படுத்துவது மற்றும் அதன் ஆபத்து

    1. மோதலின்போது அமெரிக்கா உள்ளிட்ட 100 நாடுகள் டிரோன்கள் பயன்படுத்தி வருகின்றன.

    2. குறைந்த செலவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியை இலக்கு வைத்து தாக்க முடியும் என்பதால் பயங்கரவாதிகள் கூட பயன்படுத்துகின்றனர்.

    3. வணிகம் மற்றும் நுகர்வோர் வசதிக்காக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல டிரோன் பயன்படுத்தப்படுகிறது. 2020-ல் இதன் எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்த நிலையில், 2025-க்குள் 7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4. உலகளவில் 2021-ல் இருந்து 2022-ல் விற்பனை 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    5. கடந்த சில வருடங்களாக டிரோன்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அது மீறப்படுகின்றன.

    6. ஒவ்வொரு நாடுகளும் எந்தவித அச்சமின்றி, எதிர் நாடுகள் கேள்வி கேட்கும் என்பது குறித்து கவலையில்லாமல் எளிதாக எந்த இடத்திலும் பறக்க விடுகின்றன. இதற்கு வானில் பறப்பதற்கான சிறிதளவான வழிகாட்டு தல்தான் காரணம்.

    7. ஒவ்வொரு நாடுகளும் வாங்குவது, பயன்படுத்துவதில் தனித்தனி ஆர்வம் காட்டுகின்றன.

    8. சீனா கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கான அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதனை பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதில் மேலும் தொழில்நுட்பத்தை புகுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளன.

    9. துருக்கி அதிநவீன டிரோனை பயன்படுத்துகிறது. துருக்கி பயன்படுத்தும் 'பேராக்டர் டிபி2' என்ற டிரோன், லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது ஒரு டிரக்கில் பொருத்தும் அளவிற்கு சிறிதானது.

    10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து டிரோன்கனை வாங்கி, மோதல் போக்கில் உள்ள ஏமன், லிபியா எல்லையில் ஊடுருவல்களை கண்காணிக்க பயன்படுத்துகிறது.

    11. ஆயுதமேந்திய டிரோன்களை கொண்ட நாடுகள், சர்வதேச வழிகாட்டுகளை கடைபிடிக்காமல், தங்களுக்கென வழிகாட்டுதல்களை தயார் செய்து அதை பின்பற்றுகின்றன.

    12. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்காத வரை அல்லது சொந்த பாதுகாப்பு தவிர்த்து டிரோன் பயன்படுத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது.

    13. ஆனால், ஒரு முழுமையான போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்தில், கண்காணிப்பிற்காக டிரோன்களை பயன்படுத்த முடியும்.

    14. டிரோன் பறப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

    15. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    16. முறையான வழிகாட்டுதல், விதிமுறை இல்லாததால் ஒவ்வொரு நாடுகளும் ராணுவத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என பெரும்பாலான டிரோன் வல்லுநர்கள் கருதுகிறாரள்.

    17. டிரோன்கனை வெவ்வேறு ரிமோட் மூலம் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தேனீக்கள் போன்று ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாக்கும் அபாயம் உள்ளது.

    18. வான்வெளிக்கு வெளியிலும் தாக்குதல் நடத்த முடியும்.

    19. போர்க்களத்தில் டிரோன்களை கண்டறிவது மிகவும் கடினமானதாக உள்ளது.

    20. உக்ரைன், ரஷிய படைகளுக்குக் கூட சரியாக எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய கடினமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டிரோன்கள் வேகமாக செல்லும் வாகனங்களாகின்றன.

    பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த கட்டுரையை விரைவாக எழுதியுள்ளார்.

    • ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது.
    • ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    டெஹ்ரான்:

    ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் இருக்கும் ராணுவ தொழிற்சாலையின் மீது நேற்று முன்தினம் இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    வெடிகுண்டுகளுடன் 3 டிரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 2 டிரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், ஒரு டிரோன் மட்டும் ராணுவ தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது.

    டிரோன் விழுந்து வெடித்ததில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

    ×