search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீப் மோதி"

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜீப்பை ரகு அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • விபத்தில் ஜீப் பலத்த சேதம் அடைந்தது.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு ஜீப் ஒன்று சென்றது. ஜீப்பை ரகு(19) என்பவர் ஓட்டினார். அவர் அதிவேகமாக ஜீப்பை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் ஜீப் மோதியது. இதில் ரகு பலத்த காயமடைந்தார்.

    மேலும் அவருடன் சென்ற நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ஜீப் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து நியூகோப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×