search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வபெருந்தனை"

    • ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.

    டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    ×