search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanniyar"

    • ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.

    டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×