search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் படம்"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
    • சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். கோவில் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

    இந்த விடுதியில் தொட்டம்பேடு மண்டலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இளம் பெண்ணின் குடும்பத்தினர் லாட்ஜில் இருந்து வெளியே சென்றனர். இளம் பெண் மட்டும் லாட்ஜில் தனியாக இருந்தார்.

    அப்போது இளம்பெண் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.

    லாட்ஜ் ஊழியர் சுரேஷ் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனைக் கண்ட இளம் பெண் கத்தி கூச்சலிட்டார். இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்து சுரேஷை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

    இதில் சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.

    போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவில் அருகே உள்ள விடுதியில் இதேபோல் ஊழியர் ஒருவர் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் நிகழாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்கசென்றார்.

    அப்போது குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனில் வீடியோபதிவாகி கொண்டு இருந்தது. விசாரணையில் அந்த செல்போன் எதிர்வீட்டில் வசிக்கும் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதனை அவர் குளியல் அறை ஜன்னலில் வைத்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

    இதுபற்றி ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×