search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில்பாலாஜி"

    • மற்ற மின் கட்டண உயர்வில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
    • கோவை, மதுரை,சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

    மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மக்களிடம் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

    இதுவரை கோவை, மதுரை,சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக சிறு, குறு தொழில் நடத்துவோர், தொழில் முனைவோர்கள், நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தமிழக அரசு உயர்த்துவதாக உத்தேசித்துள்ள கட்டணத்தில், தங்களுக்கான பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொழிலாளர்களின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்தி ற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறு, குறு தொழிலாளர்களுக்கான மின் கட்டண உயர்வு குறித்து மட்டும் பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக இரண்டொரு நாளில் ஒழுங்குமுறை ஆணையம் நல்ல தகவலை தெரிவிக்கும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்க உள்ளோம். மற்றபடி மற்ற மின் கட்டண உயர்வில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
    • தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    கோவை:

    கோவை கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். இதில் கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாயில் கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க இலக்கு செய்துள்ளது. வரும் 30 நாட்களில் 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்க உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சனையால் கல்விக் கடன்களை வழங்காமல் இருக்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னோடி வங்கிகள் விண்ணப்பிக்க கூடிய மாணவ, மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடன் அக்கறைகொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களுக்கு கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால் கல்வி நிறுவனங்கள் மூலமாக நீங்கள் அணுகலாம் இல்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்விக்கடனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவில்லை என வானதி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ள கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிகளில் தனி கவனம் எடுத்து வருகிறார். வ.உ.சி மைதானத்தில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அமைச்சரும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் விரைவாக முடிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    குளங்களை பொருத்தவரை பணிகள் செய்கின்ற போது குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×