search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கழுநீர் பூ"

    • ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் பூ மலர் பூத்து இருக்கும்.
    • செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள்

    மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சி செய்த போதும் புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்த போதும் தரைவழி ஆற்றின் வழியாக படகின் மூலம் போக்குவரத்து நடந்து இருக்கிறது.

    ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு போகவும், சரக்குகள் போகவும் ஆற்றையும் படகையும் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி இந்து மகாகடல் வரையில் பக்கிங்காம் கால்வாய் செல்லுகிறது.

    அந்த கால்வாய் வழியாகத் தான் மக்களுக்கு சரக்குகள் போக்குவரத்து நடந்து இருக்கிறது. ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் என்ற பூ மலர் பூத்து இருக்கும்.

    ஆற்றில் கட்டை உருளில் அம்மன் கிடைத்ததாலும் அம்மன் கழுத்து அளவு உருவம் அந்த கட்டையில் பதிந்து இருந்ததாலும் செங்கழுநீர் பூ பூத்து இருக்கும் ஆற்றில் கிடைத்ததாலும் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்ற பெயர் வைத்து அழைத்தார்கள்.

    செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள் அந்த பூவினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள். அந்த பூவில் இருந்து வரும் அபிஷேகத்தண்ணீரை பக்தர்கள் எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொள்வார்கள்.

    முகத்தில் பூசிக்கொள்வார்கள். அதனால் கண்பார்வை நன்றாகத் தெரியும் என்று மக்கள் கூறினார்கள். செங்கழுநீர் பூ மலர்ந்த ஆற்றில் அம்மன் கிடைத்ததால் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்று பெயர் வந்தது.

    ×