search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengaluneer Amman Temple"

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.

    அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் , கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமானந்தன், தனி அதிகாரி சுரேஷ், பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட வீராம்பட்டினம் கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்

    டனர். தேரோட்டத்தை யோட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் புறக்காவல் நிலையம் கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆம்புலன்ஸ் வசதி தீயணைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கோவிலுக்கு வருபவர்கள் வீராம்பட்டினம் ரோடு வழியாக செல்லவும், கோவிலில் இருந்து வருபவர்கள் சின்னவீராம்பட்டினம வழியாக மணவெளி வழியாக கடலூர் - பாண்டி ரோட்டில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 

    • ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் பூ மலர் பூத்து இருக்கும்.
    • செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள்

    மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சி செய்த போதும் புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்த போதும் தரைவழி ஆற்றின் வழியாக படகின் மூலம் போக்குவரத்து நடந்து இருக்கிறது.

    ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு போகவும், சரக்குகள் போகவும் ஆற்றையும் படகையும் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி இந்து மகாகடல் வரையில் பக்கிங்காம் கால்வாய் செல்லுகிறது.

    அந்த கால்வாய் வழியாகத் தான் மக்களுக்கு சரக்குகள் போக்குவரத்து நடந்து இருக்கிறது. ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் என்ற பூ மலர் பூத்து இருக்கும்.

    ஆற்றில் கட்டை உருளில் அம்மன் கிடைத்ததாலும் அம்மன் கழுத்து அளவு உருவம் அந்த கட்டையில் பதிந்து இருந்ததாலும் செங்கழுநீர் பூ பூத்து இருக்கும் ஆற்றில் கிடைத்ததாலும் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்ற பெயர் வைத்து அழைத்தார்கள்.

    செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள் அந்த பூவினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள். அந்த பூவில் இருந்து வரும் அபிஷேகத்தண்ணீரை பக்தர்கள் எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொள்வார்கள்.

    முகத்தில் பூசிக்கொள்வார்கள். அதனால் கண்பார்வை நன்றாகத் தெரியும் என்று மக்கள் கூறினார்கள். செங்கழுநீர் பூ மலர்ந்த ஆற்றில் அம்மன் கிடைத்ததால் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்று பெயர் வந்தது.

    • சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள்.
    • சப்தகன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி, கன்னிகள் தெய்வம், முருக கடவுள், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.

    நவக்கிரக சன்னதியில் சனிக்கிழமைகளில் ஆண்கள், பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

    சனிபிடித்து கொண்டவர்கள் சனிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் நவக்கிரகங்களையும் சனிபகவானையும் சுற்றி வந்து வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்த நவகிரக கோவில் கன்னிகளுக்கு விளக்கேற்றி வழிபட்டால் கல்யாணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் கன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள் என்பார்கள்.

    சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பலிங்கம் இவர் வீராம்பட்டினம் வந்து தங்கி விட்டார். அவருக்கு இனியவன் என்ற மகன் உண்டு.

    புதுச்சேரியில் லாட்டரி சீட்டு அரசு நடத்தியது. அதில் புஷ்பலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. அவர் முருக பக்தர். தன் சொந்தச் செலவு செய்து செங்கழுநீரம்மன் கோவிலில் முருகன் சன்னதி கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஊரில் காவடி எடுப்பதும் இரவு முருக கடவுள் வீதி உலா வருவதும் வழக்கமாக இருக்கிறது.

    செங்கழுநீர் அம்மனுக்கு பூஜை செய்வதற்கு முன் விநாயகருக்கு பூசை செய்வார்கள். இதற்காக விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    முதலில் கணபதி பூஜை நடந்த பின்தான் அம்மனுக்கு பூசை நடைபெறும்.

    இக்கோவில் தனி சன்னதியாக அமை ந்துள்ள துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் வந்து நெய்விளக்கேற்றி வழிபடுவார்கள்.

    சுமங்கலியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வார்கள்.

    கன்னிப் பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

    • புதுவைப் பகுதியில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள்.

    புதுவை மக்கள் அனைவரும் வில்லியனூருக்கு வந்து தங்கி விழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலை நிறுத்திய பின் அவரவர் ஊருக்குப் போக வேண்டும் என்று சாதிக்கு ஒரு மடம் கட்டினார்கள்.

    அந்த மடத்தில் தங்கி உண்டு, உறங்கி, விழா பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீனவர்களுக்கு 3 மடம் கட்டினார்கள்.

    1. பட்டினவர் மடம் 2. செம்படவர் மடம் 3, பனிச்சவர் மடம் என 3 மடங்களை கட்டிக்கொடுத்தார்கள். புதுவை பகுதியில் உள்ள கடற்கரையோர மீனவர்களும் ஆற்றில் மீன் பிடிக்கும் செம்படவர்களும் மீனவர்களுக்கு உதவிகள் செய்யும் பனிச்சவர்களும் வில்லியனூரில் திருவிழா காலங்களில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    புதுவைப் பகுதியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இவைகளில் பெரிய மீனவ கிராமம் வீராம்பட்டினம் ஆகும்.

    வீராம்பட்டினம் கிராமப்பஞ்சாயத்தும் பொது மக்களும் முன்னிருந்து கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்.

    கடற்கரையோரம் உள்ள மீனவர்கள், உறவு முறையினர், பட்டினவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கித் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலைநிறுத்துவார்கள்.

    அதேபோல் ஆற்றில் மீன் பிடிப்பவர்களும் செம்படவர் மடத்தில் தங்கி சமைத்து உண்டு உறங்கி தேரை இழுத்து நிலை நிறுத்துவார்கள். பனிச்சவர்களும் பனிச்சவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கி தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    வில்லியனூர் கோகிலாம்பிகை மற்றும்

    திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு மீனவர்களுக்கு என முக்கியத்துவம் கொடுத்தார்கள். தேர்த்திருவிழா அன்று தேரைவடம் பிடித்து இழுத்து மறுபடியும் நின்ற இடத்தில் நிலை நிறுத்துவது மீனவர்கள்.

    வில்லியனூர் ஊருக்கு நடுவில் கோவிலின் நான்கு புறமும் மாட வீதி, மண்ரோடு அந்த ரோட்டில் தேர் இழுப்பதற்கு வலுவான ஆட்கள் மீனவர்கள் தான் என்று உணர்ந்தார்கள்.

    மீனவர்கள் பெரிய வலை போட்டு இழுத்து பழக்கப்பட்டவர்கள். கைகள் காய்ப்பேறி இருக்கும். கைகள் மரமர என்று இருக்கும். மாட வீதியில் மண் வீதியில் மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள். இந்த சம்பவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

    ×