search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செங்கழுநீரம்மன் கோவிலுக்குள் இருக்கும் சன்னதிகள்
    X

    செங்கழுநீரம்மன் கோவிலுக்குள் இருக்கும் சன்னதிகள்

    • சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள்.
    • சப்தகன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி, கன்னிகள் தெய்வம், முருக கடவுள், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.

    நவக்கிரக சன்னதியில் சனிக்கிழமைகளில் ஆண்கள், பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

    சனிபிடித்து கொண்டவர்கள் சனிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் நவக்கிரகங்களையும் சனிபகவானையும் சுற்றி வந்து வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்த நவகிரக கோவில் கன்னிகளுக்கு விளக்கேற்றி வழிபட்டால் கல்யாணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் கன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள் என்பார்கள்.

    சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பலிங்கம் இவர் வீராம்பட்டினம் வந்து தங்கி விட்டார். அவருக்கு இனியவன் என்ற மகன் உண்டு.

    புதுச்சேரியில் லாட்டரி சீட்டு அரசு நடத்தியது. அதில் புஷ்பலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. அவர் முருக பக்தர். தன் சொந்தச் செலவு செய்து செங்கழுநீரம்மன் கோவிலில் முருகன் சன்னதி கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஊரில் காவடி எடுப்பதும் இரவு முருக கடவுள் வீதி உலா வருவதும் வழக்கமாக இருக்கிறது.

    செங்கழுநீர் அம்மனுக்கு பூஜை செய்வதற்கு முன் விநாயகருக்கு பூசை செய்வார்கள். இதற்காக விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    முதலில் கணபதி பூஜை நடந்த பின்தான் அம்மனுக்கு பூசை நடைபெறும்.

    இக்கோவில் தனி சன்னதியாக அமை ந்துள்ள துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் வந்து நெய்விளக்கேற்றி வழிபடுவார்கள்.

    சுமங்கலியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வார்கள்.

    கன்னிப் பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

    Next Story
    ×