search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வில்லியனூருக்கும் வீராம்பட்டினத்துக்கும் உள்ள தொடர்பு
    X

    வில்லியனூருக்கும் வீராம்பட்டினத்துக்கும் உள்ள தொடர்பு

    • புதுவைப் பகுதியில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள்.

    புதுவை மக்கள் அனைவரும் வில்லியனூருக்கு வந்து தங்கி விழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலை நிறுத்திய பின் அவரவர் ஊருக்குப் போக வேண்டும் என்று சாதிக்கு ஒரு மடம் கட்டினார்கள்.

    அந்த மடத்தில் தங்கி உண்டு, உறங்கி, விழா பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீனவர்களுக்கு 3 மடம் கட்டினார்கள்.

    1. பட்டினவர் மடம் 2. செம்படவர் மடம் 3, பனிச்சவர் மடம் என 3 மடங்களை கட்டிக்கொடுத்தார்கள். புதுவை பகுதியில் உள்ள கடற்கரையோர மீனவர்களும் ஆற்றில் மீன் பிடிக்கும் செம்படவர்களும் மீனவர்களுக்கு உதவிகள் செய்யும் பனிச்சவர்களும் வில்லியனூரில் திருவிழா காலங்களில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    புதுவைப் பகுதியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இவைகளில் பெரிய மீனவ கிராமம் வீராம்பட்டினம் ஆகும்.

    வீராம்பட்டினம் கிராமப்பஞ்சாயத்தும் பொது மக்களும் முன்னிருந்து கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்.

    கடற்கரையோரம் உள்ள மீனவர்கள், உறவு முறையினர், பட்டினவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கித் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலைநிறுத்துவார்கள்.

    அதேபோல் ஆற்றில் மீன் பிடிப்பவர்களும் செம்படவர் மடத்தில் தங்கி சமைத்து உண்டு உறங்கி தேரை இழுத்து நிலை நிறுத்துவார்கள். பனிச்சவர்களும் பனிச்சவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கி தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    வில்லியனூர் கோகிலாம்பிகை மற்றும்

    திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு மீனவர்களுக்கு என முக்கியத்துவம் கொடுத்தார்கள். தேர்த்திருவிழா அன்று தேரைவடம் பிடித்து இழுத்து மறுபடியும் நின்ற இடத்தில் நிலை நிறுத்துவது மீனவர்கள்.

    வில்லியனூர் ஊருக்கு நடுவில் கோவிலின் நான்கு புறமும் மாட வீதி, மண்ரோடு அந்த ரோட்டில் தேர் இழுப்பதற்கு வலுவான ஆட்கள் மீனவர்கள் தான் என்று உணர்ந்தார்கள்.

    மீனவர்கள் பெரிய வலை போட்டு இழுத்து பழக்கப்பட்டவர்கள். கைகள் காய்ப்பேறி இருக்கும். கைகள் மரமர என்று இருக்கும். மாட வீதியில் மண் வீதியில் மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள். இந்த சம்பவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

    Next Story
    ×