search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் வருகை"

    • போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் நகர் மற்றும் வனப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த பின்னர் நகரில் உள்ள நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர். போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக கழிப்பறைகள், போதிய அளவில் இல்லாத தால் பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இ-டாய்லெட் அமைக்க ப்பட்டு இருந்த நிலையில் அனைத்துமே செயல்படாமல் உள்ளது.

    இதன் காரணமாக ஆண்கள் திறந்த வெளியிலேயே கழிப்பறை களாக பயன்படு த்தினர். சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், தனியார் வீடுகளும் அறைகளாக மாற்றப்பட்டு அதிக வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை யினரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் மூஞ்சிக்கல் சாலை சந்திப்பில் வேன்களை நிறுத்தி உணவகங்கள், நினைத்த இடத்தில் எல்லாம் காய்கறி கடைகள் என அமைத்து பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமலும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சாலையை இலகுவாக கடக்க முடியாமலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் வர கூடும் என்பதால் மே மாதத்திற்குள் பிரதான நெடுஞ்சாலையில் ஆக்கிர மிப்புகளை அகற்ற வில்லையெனில் மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கடும் இன்ன லுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.


    • பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
    • கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    இங்கு தினமும் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாகவும், மக்கள் கூட்டம் அதிகமாகவும் காணப்படும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    வெள்ளம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வருகின்றனர்.விடுமுறை தினமான நேற்று கவியருவியில் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கார், வேன் உள்ளிட்டவற்றில் வந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆழியார் அணைக்கு சென்று அணையை பார்வையிட்டனர். மேலும் ஆழியார் பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    கடந்த 2 நாளில் மட்டும் கவியருவிக்கு 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 950க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். சோதனை சாவடி மூலம் வனத்துறையினருக்கு ரூ.47 ஆயிரம் வரை கட்டண தொகை வசூலாகியுள்ளது.

    • சுதந்திர தினத்தையொட்டி 13, 14, 15-ந் தேதிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

    ஊட்டி:

    சுதந்திர தினத்தையொட்டி 13, 14, 15-ந் தேதிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கழிக்க மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    படகு இ்ல்ல சாலையில் குதிரை சவாரி சென்று குதூகலம் அடைந்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறையான 3 நாட்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    • ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
    • பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வருவது தொடர்கின்றது.

    குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

    கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    பள்ளிகள் திறந்த பின்னரும் கனிசமான அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. கடந்த சில தினங்களாக ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது.

    ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் சுற்றுலா தலங்களை ரசித்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி, பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.f

    ×