search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists visit"

    • போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் நகர் மற்றும் வனப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த பின்னர் நகரில் உள்ள நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர். போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக கழிப்பறைகள், போதிய அளவில் இல்லாத தால் பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இ-டாய்லெட் அமைக்க ப்பட்டு இருந்த நிலையில் அனைத்துமே செயல்படாமல் உள்ளது.

    இதன் காரணமாக ஆண்கள் திறந்த வெளியிலேயே கழிப்பறை களாக பயன்படு த்தினர். சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், தனியார் வீடுகளும் அறைகளாக மாற்றப்பட்டு அதிக வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை யினரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் மூஞ்சிக்கல் சாலை சந்திப்பில் வேன்களை நிறுத்தி உணவகங்கள், நினைத்த இடத்தில் எல்லாம் காய்கறி கடைகள் என அமைத்து பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமலும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சாலையை இலகுவாக கடக்க முடியாமலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் வர கூடும் என்பதால் மே மாதத்திற்குள் பிரதான நெடுஞ்சாலையில் ஆக்கிர மிப்புகளை அகற்ற வில்லையெனில் மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கடும் இன்ன லுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.


    முதுமலையில் யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

    முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.

    பயிற்சி முடிந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலமாக யானை சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளை கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறும்போது, முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலை 2 முறை மாலை 2 முறை என 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கால தாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது.

    ஆனால் தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ.1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் முகரம் பண்டிகையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக குளிர்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பூங்காவில் உள்ள உயரமான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா, நியூ கார்டன், பெரணி இல்லம், இத்தாலியன் பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்டு உள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவின் பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில்மிகு அழகை ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின் போது, பசுமையான மரங்கள், கரையோரத்தில் உள்ள பூங்காவில் உள்ள கடமான்களை கண்டு ரசித்தனர். அங்கு நிலவிய சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தனர். படகு இல்ல வளாகத்தில் விற்பனை செய்யப்படும் கிவி, மங்குஸ்தான், ரம்பூட்டான் உள்ளிட்ட பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தொலைநோக்கி மூலம் அப்பர்பவானி, ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, குண்டல்பெட், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களை பார்த்தனர். அங்கு காட்சி முனையில் நின்ற படி இயற்கை அழகு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை கண்டு ரசித்தனர். இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. 
    ×