search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி"

    சீர்காழி அருகே காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த தொழிலாளி குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலவளவுகுடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கொடி செல்வி (24) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 18.1.2018 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு அன்பரசன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். உனது பெற்றோரிடம் சென்று புது மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை வாங்கி வா என்று கூறி செங்கொடி செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் வேதனையடைந்த அவர் இது பற்றி சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×