search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடை பணியாளர் தேர்வு"

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங் களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    5 சதவீதம் ஒதுக்கீடு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிபணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ம் நிலைக் காவலர் 1,819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் -83, பெண்கள் -3 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர்- 674 காலி பணியிடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் வீரர்கள்

    இப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீ ரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர் உள்பட 4 மாவட்டத்தில் நடந்தது
    • அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 14,991 பேர் தேர்வு எழுதினர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தேர்வு மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மையங்களில் 12,278 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி, கலவை ஆதிபராசக்தி கல்லூரி என 5 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் ஆண்கள் -5,217 பெண்கள்-1,111 மூன்றாம் பாலினத்தவர்-1 மொத்தம் 6,329 பேர் தேர்வு எழுதினர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் புனித தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னுசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதர் கேசரி ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.7,318 பேர் இந்த மையங்களில் தேர்வு எழுதினர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது.
    • சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்ப ட்டுள்ளது இதில்தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரி வில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்ப தாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணி ப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார்.

    தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரா னிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    ×