search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Staff Selection"

    • சீருடைப் பணியாளர் தேர்வு 6 மையங்களில் நடக்கிறது
    • இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 6 ஆயிரத்து 230 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

    பரமக்குடி கே.ஜே.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ராமநா தபுரத்தில் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யத ம்மாள் கலை அறிவியல் கல்லூரி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, செய்ய தம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

    தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் வழங்கப்பட்ட புகை படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்தினை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும்.

    அரசால் வழங்கப் பட்டுள்ள புகைப்படத்து டன் கூடிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும். தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும்.

    காலதாமதமாக வருப வர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி இல்லை. விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கு வரும் பொழுது அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா ஆகிய வற்றை தவிர வேறு எதுவும் கொண்டுவரக்கூடாது.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

    • 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது.
    • சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்ப ட்டுள்ளது இதில்தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரி வில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்ப தாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணி ப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார்.

    தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரா னிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    ×