search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strong Warning"

    • 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது.
    • சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்ப ட்டுள்ளது இதில்தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரி வில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்ப தாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணி ப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார்.

    தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரா னிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    ×