search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniformed Staff Selection"

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங் களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    5 சதவீதம் ஒதுக்கீடு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிபணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ம் நிலைக் காவலர் 1,819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் -83, பெண்கள் -3 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர்- 674 காலி பணியிடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் வீரர்கள்

    இப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீ ரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×