search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniformed Personnel Selection"

    • வேலூர் உள்பட 4 மாவட்டத்தில் நடந்தது
    • அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 14,991 பேர் தேர்வு எழுதினர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தேர்வு மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மையங்களில் 12,278 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி, கலவை ஆதிபராசக்தி கல்லூரி என 5 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் ஆண்கள் -5,217 பெண்கள்-1,111 மூன்றாம் பாலினத்தவர்-1 மொத்தம் 6,329 பேர் தேர்வு எழுதினர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் புனித தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னுசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதர் கேசரி ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.7,318 பேர் இந்த மையங்களில் தேர்வு எழுதினர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×