search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்க வேண்டும்"

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது :-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் காணப்படும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சி களுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் என பல சாலை கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் பெரும் கனமழையால் சாலைகளில் ஏராளமான ராட்சத பள்ளங்கள் ஏற் பட்டுள்ளது. இந்த ராட்சத பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளங்கள் எங்கெல்லாம் உள்ளது என்று தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.

    மேலும் இந்த சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல வும், அனைத்து வாகனங்க ளும் செல்ல முடியாத நிலையில் இந்த சாலைகள் காணப்படுகிறது. ஆகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்து மிகவும் மோச மான நிலையில் காணப்படும் சாலைகளான பரசேரி-– திங்கள்நகர்-புதுக்கடை சாலை, கன்னியாகுமரி-–பழைய உச்சக்கடை சாலை, மங்காடு சாலை (முஞ்சிறை- கோழிவிளை), தொழிக் கோடு-முள்ளூர்துறை சாலை, மங்காடு கணபதி யான்கடவு-நடைக்காவு சாலை, கருங்கல்-எட்டணி- இரவிபுதூர்கடை சாலை, கருங்கல்-மார்த்தாண்டம் சாலை, கருங்கல்- கருமா விளை-குளச்சல் சாலை, பணமுகம் – ஆலங்கோடு சாலை, சூழால்-நடைக்காவு சாலை, விரிவிளை- மங்காடு சாலை, மிடாலம்- பாலூர் சாலை, காஞ்சாம்பு றம்-வைக்கலூர் சாலை, நம்பாளி-கிராத்தூர் சாலை, கொல்லங்கோடு- கண்ண நாகம்-பாறசாலை சாலை, நீரோடி-இரையுமன்துறை சாலை, தேங்காப்பட்டணம்- குழித்துறை சாலை, கொல் லங்கோடு-களியக்கா விளை சாலை உட்பட மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு சாலைகள் மழையினால் சேதமடைந்து மிகவும் மோ சமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படும் அனைத்து சாலைகளையும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடந்த 3 ஆண்டு களாக காந்தி நினைவு மண்டபம் பராம ரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
    • நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த 1956-ம் ஆண்டு காவேரிப்பட்டிணம் பகுதியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் 3.8 சென்ட் நிலம் வழங்கினார்.

    அந்த நிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் மணியகார் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பிறந்தநாள்கள், நினைவு நாட்கள், போன்றவை நடத்தப்பட்டு வந்தன.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அவருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் பட்டாபி நாயுடு, அவருக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் கொண்ட அறக் கட்டளை குழு காந்தி நினைவு மண்டபத்தை பராமரித்து வந்தது.

    அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி நினைவு மண்டபம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.

    காந்தி நினைவு மண்டபத் திற்குள் உள்ள கலையரங்கங்கள் சேதமடைந்தும், கதவுகள் உடைந்தும், செடிகள் முளைத்து முட்புதர்களாகவும் பரா மரிப்பின்றி காணப்படுகிறது.

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    அதேபோல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு சேர்மன் விஜய் இந்தர் சிங்லா, குழு உறுப்பினர்கள் நிதின் கும்பகர், வாசு ஆகியோர் காந்தி மண்டபம் மற்றும் அதன் சொத்துக்களை கடந்த ஜூலை மாதம் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில காங்கிரஸ் கட்சியும், தேசிய காங்கிரஸ் கட்சியும் காந்தி நினைவு மண்டபத்தை புனரமைத்து சுதந்திர போராட்ட வரலாற்றை படைப் பாற்றும் விதமாக கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை.
    • பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.kris

    ஓசூர்,

    தமிழக எல்லையில் ஓசூர் அருகே ஜுஜுவாடி யில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராம மாணவ, மாணவிகள் என 1,720 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலையிருந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறுகையில், ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை. இருக்கும் கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. விளையாட்டு மைதானமும் இல்லை. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவரும் இல்லை.

    மேலும், பள்ளி வளாகத்தையொட்டி அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் 10 அடி பள்ளம் உள்ளது. பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு கழிப்பறையில் அடிக்கடி பாம்பு வருவதால், அது எப்போதும் மூடப்பட்டு, காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.

    இதனால், திறந்தவெளியில் உள்ள பள்ளம் பகுதியை மாணவர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்பள்ளி மாநில எல்லையில் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் இருக்கும் கழிப்பறையைப் பராமரித்து முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளி வளாகத்தில் இருக்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்கவும், உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் பள்ளியில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளிக்கு அருகேயுள்ள பகுதியில் சுற்றி வருகின்றனர். பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

    கரடும், முரடுமான பகுதியை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் நிலையுள்ளது. 3 உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இதனால், மாணவர்கள் முறையான விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை என கூறினர்.

    இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×