search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட தலைவர் கோரிக்கை"

    • கடந்த 3 ஆண்டு களாக காந்தி நினைவு மண்டபம் பராம ரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
    • நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த 1956-ம் ஆண்டு காவேரிப்பட்டிணம் பகுதியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் 3.8 சென்ட் நிலம் வழங்கினார்.

    அந்த நிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் மணியகார் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பிறந்தநாள்கள், நினைவு நாட்கள், போன்றவை நடத்தப்பட்டு வந்தன.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அவருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் பட்டாபி நாயுடு, அவருக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் கொண்ட அறக் கட்டளை குழு காந்தி நினைவு மண்டபத்தை பராமரித்து வந்தது.

    அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி நினைவு மண்டபம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.

    காந்தி நினைவு மண்டபத் திற்குள் உள்ள கலையரங்கங்கள் சேதமடைந்தும், கதவுகள் உடைந்தும், செடிகள் முளைத்து முட்புதர்களாகவும் பரா மரிப்பின்றி காணப்படுகிறது.

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    அதேபோல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு சேர்மன் விஜய் இந்தர் சிங்லா, குழு உறுப்பினர்கள் நிதின் கும்பகர், வாசு ஆகியோர் காந்தி மண்டபம் மற்றும் அதன் சொத்துக்களை கடந்த ஜூலை மாதம் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில காங்கிரஸ் கட்சியும், தேசிய காங்கிரஸ் கட்சியும் காந்தி நினைவு மண்டபத்தை புனரமைத்து சுதந்திர போராட்ட வரலாற்றை படைப் பாற்றும் விதமாக கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
    • முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன், காங்கிரஸ் மேலிடத்திற்கு வைத்துள்ள கோரிக்கை வருமாறு-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடு, சுதந்திரம் அடைந்த காலம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம், காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், காங்கிரஸ் காரிய கமிட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த அவர், தொடர்ந்து கட்சிக்காக பாடுபட்டு வருகிறார். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் வளர்ச்சியடையும், பலம் பெறும்.

    இது தொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூர் வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும். தற்போது நமது பகுதியில் எம்.பி.யாக உள்ள டாக்டர் செல்ல குமாரும், காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார். ஆனால்,அவர் நமது மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல, என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளோம். செல்வகுமார் எம்.பி.யும், கோபிநாத்துக்காக மேலிடத்தில் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×