என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ் காரிய கமிட்டியில் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் -கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் கோரிக்கை
- மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
- முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன், காங்கிரஸ் மேலிடத்திற்கு வைத்துள்ள கோரிக்கை வருமாறு-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடு, சுதந்திரம் அடைந்த காலம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம், காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், காங்கிரஸ் காரிய கமிட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த அவர், தொடர்ந்து கட்சிக்காக பாடுபட்டு வருகிறார். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் வளர்ச்சியடையும், பலம் பெறும்.
இது தொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூர் வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும். தற்போது நமது பகுதியில் எம்.பி.யாக உள்ள டாக்டர் செல்ல குமாரும், காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார். ஆனால்,அவர் நமது மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல, என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளோம். செல்வகுமார் எம்.பி.யும், கோபிநாத்துக்காக மேலிடத்தில் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்