search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்
    X

    கனமழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது :-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் காணப்படும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சி களுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் என பல சாலை கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் பெரும் கனமழையால் சாலைகளில் ஏராளமான ராட்சத பள்ளங்கள் ஏற் பட்டுள்ளது. இந்த ராட்சத பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளங்கள் எங்கெல்லாம் உள்ளது என்று தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.

    மேலும் இந்த சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல வும், அனைத்து வாகனங்க ளும் செல்ல முடியாத நிலையில் இந்த சாலைகள் காணப்படுகிறது. ஆகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்து மிகவும் மோச மான நிலையில் காணப்படும் சாலைகளான பரசேரி-– திங்கள்நகர்-புதுக்கடை சாலை, கன்னியாகுமரி-–பழைய உச்சக்கடை சாலை, மங்காடு சாலை (முஞ்சிறை- கோழிவிளை), தொழிக் கோடு-முள்ளூர்துறை சாலை, மங்காடு கணபதி யான்கடவு-நடைக்காவு சாலை, கருங்கல்-எட்டணி- இரவிபுதூர்கடை சாலை, கருங்கல்-மார்த்தாண்டம் சாலை, கருங்கல்- கருமா விளை-குளச்சல் சாலை, பணமுகம் – ஆலங்கோடு சாலை, சூழால்-நடைக்காவு சாலை, விரிவிளை- மங்காடு சாலை, மிடாலம்- பாலூர் சாலை, காஞ்சாம்பு றம்-வைக்கலூர் சாலை, நம்பாளி-கிராத்தூர் சாலை, கொல்லங்கோடு- கண்ண நாகம்-பாறசாலை சாலை, நீரோடி-இரையுமன்துறை சாலை, தேங்காப்பட்டணம்- குழித்துறை சாலை, கொல் லங்கோடு-களியக்கா விளை சாலை உட்பட மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு சாலைகள் மழையினால் சேதமடைந்து மிகவும் மோ சமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படும் அனைத்து சாலைகளையும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×